உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கணினிப் பொறியாளர்களுக்கான 42 காலிப் பணியிடங்களை நிரப்புகிறார்கள். தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
www.bel-india.in என்ற இணையதளத்தில் முழு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை அதில் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தபால் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்பி வைக்கக் கடைசித் தேதி டிசம்பர் 11, 2024 ஆகும். இதேபோன்று பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் பல்வேறு துறைப் பொறியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் 75 கணினிப் பொறியாளர்களின் பணியிடங்களும் உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு டிசம்பர் மாதத்தில் பெங்களூருவில் நடைபெறும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர் 10, 2024 ஆகும். கூடுதல் விபரங்களை https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.